பணவீக்கத்தை வெல்ல உதவும் பத்திரங்கள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் – பொருளாதார நிபுணர்

Date:

இந்தியாவில் நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்திற்கு, குறிப்பாக ஓய்வூதியம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இது ஒரு கடினமான காலம், மத்திய மாநில அரசுகளில் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யாத பெரும்பாலான இந்தியர்கள், அவர்கள் கடைசியாக வாங்கிய சம்பளம் மற்றும் பணவீக்கத்திற்கு இணையான குறியீட்டுடன் ஓய்வூதிய சலுகைகளைப் பெற வாய்ப்பில்லை, மாறாக, இவர்களில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் வங்கிகளில் வைத்திருக்கும் வைப்பு நிதியில் இருந்து வரும் வட்டியை நம்பி இருக்கிறார்கள். எச்டிஎஃப்சி வங்கி வழக்கமான வைப்புத் தொகைக்கு 4.9 சதவிகிதமும், மூத்த குடிமக்களுக்கு முறையே 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை நிலையான வைப்புத் தொகைக்கான வட்டியாக 5.4% வழங்குகிறது, எஸ்பிஐ முறையே அந்தந்தப் பிரிவுகளுக்கு 5% மற்றும் 5.50% வழங்குகிறது.

பணவீக்கத்தினால் ஏற்படும் இழப்புகள்:

கடந்த ஆண்டுகளில், பணவீக்கத்தினால் ஏற்பட்ட இழப்புகள் மூத்த குடிமக்களை பெருமளவில் பாதித்திருக்கிறது, பெருநிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்த இந்த மூத்த குடிமக்கள், ஓய்வு பெற்ற வாழ்வில் மிதமான வறுமையை எதிர்கொள்கின்றனர், அல்லது பெரும்பாலும் இவர்கள் தங்கள் குழந்தைகளை சார்ந்திருக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். சமீப காலங்களில், பொருளாதார மந்த நிலையை எதிர்த்து வளர்ச்சியைத் தூண்ட இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட முயற்சிகள் வட்டி விகிதங்களில் மேலும் சரிவை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, வைப்பு நிதியானது எதிர்மறையான வருமானத்தைத்தான் வழங்குகிறது. மொத்த விலைப் பணவீக்கம் 10.5% ஆக மாறி இருக்கிறது, மற்றும் நுகர்வோர் விலை பணவீக்கம் ஆண்டுக்கு சராசரியாக 5% க்கு மேல் உயர்ந்து வருகிறது. பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், நுகர்வோர் விலைப் பணவீக்கம் அவ்வளவு எளிதில் குறைய வாய்ப்பில்லை. உற்பத்தியாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் உயர் விலை விகிதங்களை, அதாவது பணவீக்கத்தினால் ஏற்படும் சுமைகளை நுகர்வோருக்கு விற்கும் விலையில் தான் உயர்த்தி சரிக்கட்டுவார்கள்.

மேலும், நுகர் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பது தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கைகளின் மூலமாக ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும், இது அதிக அளவிலான தயாரிப்பு உள்ளீட்டு செலவுகளுக்கு வழிவகுக்கும், இது மீண்டும் பொருட்களின் விலைகளை உயர்த்தும். இது ஒரு பணவீக்க சுழற்சியாகும், இது வளர்ச்சியை அழிக்கிறது, பொருளாதாரத் தேக்கநிலைக்கு வழிவகுக்கிறது. இந்த தேக்கநிலையை சமாளிக்க, ரிசர்வ் வங்கி ஒரு சிக்கலான நிதிக் கொள்கையை செயல்படுத்தியாக வேண்டும், அதாவது வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட வேண்டும், இது ஏற்கனவே பலவீனமான பொருளாதாரத்திற்கு கூடுதல் தீமைகளை விளைவிக்கும்.

கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு காரணி ஜான் மேனார்ட் கீன்ஸால் பிரபலமான பொருளியல் கருத்தாக்கமாக சொல்லப்பட்ட “ரேட்செட்” விளைவு ஆகும். நுகர்வோர் விலை பணவீக்கம் அல்லது ஊதியப் பணவீக்க சூழலுக்குப் பிறகு, உற்பத்தியாளர்களும், தொழிலாளர் சந்தைகளும் தங்கள் விலைகளை முந்தைய சமநிலை அளவுக்கு சரிசெய்யத் தவறுகின்றன, விலைகளைக் குறைப்பதற்கு மாறாக வணிகத்தை விட்டே அவர்கள் வெளியேறி விடுகின்றனர் என்று “ரேட்செட்” விளைவு விளக்குகிறது. இந்த ரேட்செட் விளைவு என்பது பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதை இன்னும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது.

குறுகி வரும் வாய்ப்புகளை, சாதாரண குடிமக்களின் இக்கட்டான வாழ்க்கை நிலையை மையமாக வைத்துப் பார்க்கும்போது, அவர்களின் மூலதனம் மற்றும் சேமிப்புகளின் மூலம் ஈட்டுகிற வட்டி ஆகிய இரண்டின் உண்மையான மதிப்புகளை இன்று மிக வேகமாக குறைத்து வருகிறது. குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பணவீக்கத்திற்கு எதிராக தங்கள் செல்வத்தையும் வருமானத்தையும் பாதுகாக்க ஒரு உறுதியான வழி தேவை.

பொதுவாகவே பங்குச் சந்தை முதலீடுகள் பணவீக்கத்திற்கு எதிரான செல்வத்தின் பாதுகாவலனாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போது வெளிநாட்டு மத்திய வங்கிகளில் இருந்து அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட அதிகப்படியான பணப்புழக்கம் நமது பங்குச் சந்தைகளில் உள்ளீடு செய்யப்பட்டு பங்குகள் அதீத மதிப்புடையவையாக மாற்றப்பட்டிருக்கிறது.

மிக அதிகமான விலை மற்றும் குறைந்த வாடகை வருமானங்களால் ரியல் எஸ்டேட் முதலீடு சாத்தியமில்லை. பணவீக்கத்திற்கு எதிராக நடுத்தர மக்கள் தங்கள் செல்வத்தைப் பாதுகாக்க தங்கம் ஒரு சாத்தியமான வழியாகும், ஆனால் தங்கம் ஒரு பயனற்ற சொத்து என்பதால் வழக்கமான வருமானத்தை வழங்காது. கூடுதலாக, இதில் உள்ள செலவுகளை கணக்கில் கொண்டு பார்த்தால் (சேமிப்பு மற்றும் பாதுகாப்பு செலவுகள்) தங்கம் போன்ற ஒரு சொத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வது பயனளிக்காது.

எனவே, மூத்த குடிமக்கள் மற்றும் பொதுவான நடுத்தர முதலீட்டாளர்களிடம் கடைசியாக இருக்கும் சிறந்த வாய்ப்பு, பத்திரங்கள் மட்டும்தான். மூத்த குடிமக்கள் தொடர்ந்து மூலதன இழப்பு மற்றும் வட்டி இழப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள புகழ்பெற்ற நம்பகமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் வெளியிடப்படும் உயர்தர கார்ப்பரேட் பத்திர முதலீடுகளுக்கு மாற வேண்டும். இந்தப் பத்திரங்கள் தினந்தோறும் வர்த்தகம் செய்யும் வகையில் கிடைக்கிறது, மேலும் அவசரகாலத் தேவைகளுக்காக குறுகிய காலத்தில் பணமாக மாற்றப்படும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. இந்த பத்திரங்கள் வர்த்தகம் செய்யக்கூடியவை என்பதால், வரிப் பிடித்தங்களும் இல்லை. இது முதலீட்டாளர்களுக்கு வரித் திட்டமிடலுக்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. மதிப்பு வாய்ந்த, பெரிய நிறுவனங்களின் பத்திரங்கள் 8.5 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வரை வருமானமீட்டுகின்றன. இன்றைய பொருளாதார சூழலில் இது ஒரு கவர்ச்சிகரமான வருவாய். மூத்த குடிமக்கள் மற்றும் நடுத்தர வர்க்க முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக ஏற்படும் இழப்புகளைக் குறைத்து லாபமீட்ட பத்திரங்களை வாங்குவதுதான் மிகச்சிறந்த வழியாகும்.

குறைந்தபட்சமாக 1000 ரூபாயிலிருந்து பத்திரங்களை நீங்கள் வாங்க முடியும், கூடுதல் தகவல்களுக்கும், சிறந்த பத்திரங்களை வாங்கவும் திரு.ஜானகிராமன் அவர்களை 7305088517 என்ற அலைபேசி எண்ணில் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...