சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு – மக்கள் அதிர்ச்சி!

Date:

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ₹25 உயர்ந்ததால், தமிழகத்தில் சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டியது. 9 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹285 உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ₹1831.50 ஆக உள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை தினசரி சரி செய்யத் தொடங்கியதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. மறுபுறம், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்திற்கு இரண்டு முறை சரி செய்யப்படுகிறது. சில நேரங்களில் இது மாதத்திற்கு 3 முறை கூட மாற்றியமைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு காஸ் சிலிண்டரின் விலை 700 ரூபாயாக இருந்தது, ஆகஸ்ட் 17 அன்று  875 ரூபாய் 50 காசுகளாக அதிகரித்தது. இன்று,  சிலிண்டரின் விலை மேலும் ₹25 அதிகரித்து 900 ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே, இந்த ஆண்டில் மட்டும், எரிவாயு சிலிண்டர்களின் விலை ₹285 உயர்ந்துள்ளது.

எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பாலும் மக்கள் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளது. “மீண்டும் கேஸ் சிலிண்டர் விலை ₹25 ஏற்றம். சாமானிய மக்களை சுரண்டுவதில் தான் எப்போதும்  யாருக்கும் சளைத்தவர் இல்லை என மோடி சொல்லாமல் சொல்கிறார். மீண்டும் மீண்டும் அதை நிரூபித்தும் வருகிறார். #IndiaAgainstBJPLoot,” என்று காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...