செபியின் புதிய ஒழுங்குமுறைகள் ! லாக்-இன் காலம் நீட்டிப்பு !

Date:

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) செவ்வாயன்று, ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான லாக் – இன் காலத்தை 90 நாட்களுக்கு நீட்டிப்பது உட்பட பல முடிவுகளை எடுத்தது, சந்தைக் கட்டுப்பாட்டாளர், மூலதனம் மற்றும் சமர்ப்பித்தலுக்கான தேவைகள் தொடர்பான விதிமுறைகளில் மாற்றங்களை அனுமதித்துள்ளது மேலும் ஐபிஓக்கான தொடர் பயன்பாட்டிற்கான விதிகளையும் கடுமையாக்கியது. “தற்போதுள்ள லாக் – இன் காலமானது 30 நாட்களாக இருக்கிறது, ஆங்கர் முதலீட்டாளருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியின் 50 சதவீதம் வரை இது தொடரும், மீதமுள்ள பகுதிக்கு, ஏப்ரல் 1, 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு திறக்கப்படும் அனைத்து ஐபிஓ வெளியீடுகளுக்கும் ஒதுக்கப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்கள் வரை இருக்கும்” என்று செபி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

உணவு விநியோக நிறுவனமான ஸொமேட்டோ மற்றும் பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றின் பங்குகள் முறையே 9 சதவீதம் மற்றும் 13 சதவீதம் சரிந்த நேரத்தில், அவர்களின் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான கட்டாய ஒரு மாத லாக்-இன் காலம்  முடிவடைந்தவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. “செபி 20% க்கும் மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களை ஐபிஓக்களில் விற்பனைக்கான சலுகை (ஓஎஃப்எஸ்) மூலம் அதிகபட்சம் 50% பங்குகளை விற்க கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்தது, டிஆர்எச்பி மூலமாக தணிக்கை இல்லாத முதலீட்டாளர்களுக்கு இது பொருந்தும்” என்று செபி மேலும் கூறியது. .

ஐபிஓ வெளியீட்டிற்குப் பின்பு செலுத்தப்பட்ட மூலதனத்தில் 20 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்வதற்கான லாக்-இன் தேவை தற்போதுள்ள 3 ஆண்டுகளில் இருந்து 18 மாதங்களாகக் குறைக்கப்படும். ஐபிஓ வெளியீட்டிற்குப் பின்பு செலுத்தப்பட்ட மூலதனத்தின் 20 சதவீதத்துக்கும் அதிகமான ஒதுக்கீட்டிற்கான லாக்-இன் தேவை தற்போதுள்ள 1 வருடத்திலிருந்து 6 மாதங்களாக குறைக்கப்படும். ஒதுக்கீடுகளுக்கான லாக்-இன் கால இடைவெளி 1 வருடத்தில் இருந்து 6 மாதங்களாக குறைக்கப்படும்.

மாற்று முதலீட்டு நிதிகள், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதிகள், தீர்வு நடவடிக்கைகள் போன்றவற்றை நிர்வகிக்கும் ஒழுங்குமுறைகளில் திருத்தங்களுக்கும் செபி ஒப்புதல் அளித்துள்ளது. காரண விளக்க நோட்டீஸ் பெறப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரை நிறுவனங்கள் மூலம் தீர்வு விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செபி வழங்கியுள்ளது. பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பொதுக் குழுவில் முழு நேர இயக்குநர்கள் அல்லது நிர்வாக இயக்குநர்கள் அல்லது மேலாளர்கள் உட்பட இயக்குநர்களாகத் தேர்ந்தெடுக்கப்படாத நபர்களின் நியமனம் அல்லது மறு நியமனம் தொடர்பான விதிகளை அறிமுகப்படுத்தவும் கண்காணிப்புக்குழு முடிவு செய்துள்ளது.

பொது நிறுவன நோக்கத்திற்கான தொகை (ஜிசிபி) திரட்டப்பட்ட மொத்த தொகையில் 35 சதவீதத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று செபி தெரிவித்துள்ளது.மேலும், ஜிசிபிக்காக திரட்டப்படும் தொகையும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும் மற்றும் அதைப் பயன்படுத்துதல் கண்காணிப்பு தணிக்கை அறிக்கையில் வெளிப்படுத்தப்படும். வருடந்தோறும் என்று இருந்த கண்காணிப்பு தணிக்கை அறிக்கை இனி வரும் காலங்களில் காலாண்டு அடிப்படையில் பரிசீலனைக்காக தணிக்கை குழு முன் வைக்கப்படும்”. என்றும் செபி குறிப்பிட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...