இத்தனை கோடி கடன்களை வங்கிகள் கைவிட்டனவா? என்ன காரணம்? ஒரு அலசல்!

Date:

கொடுத்த கடனை வசூலிக்க முடியவில்லை என்றால் அது வாராக்கடன் (bad loans) என்றழைக்கப்படும். 90 நாட்களுக்குள் ஒரு கடன் வசூலிக்கபடவில்லை என்றால் அது வாராக்கடனாக கருதப்படும். மார்ச் 2018 வரையில் இந்திய வங்கிகள் சேர்த்து வைத்த வாராக்கடன்களின் ரொக்கம் ₹10.36 லட்சம் கோடி. 2018-லிருந்து இந்த தொகை கீழே சரியத் . மக்களவையில் (Lok Sabha) எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு அண்மையில் விடையளித்த அரசாங்கம், 2021 மார்ச் நிலவரப்படி வாராக்கடன்கள் ₹8.35 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாகக் கூறியது. வாராக்கடன்கள் மார்ச் 2018 முதல் மார்ச் 2021 வரை, ₹2 லட்சம் கோடிக்கு மேல் குறைந்துள்ளன. இது ஒரு நல்ல வீழ்ச்சி என்பது போல் தோன்றினாலும், பல கோடிக்கணக்கான மதிப்புள்ள கடன்கள் பல ஆண்டுகளாக வங்கிகளால் கைவிடப்பட்டன (write-off) என்ற உண்மையை அது கருத்தில் கொள்ளவில்லை.

2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை வங்கிகளால் கைவிடப்பட்ட வாராக்கடன்கள் ₹1.15 லட்சம் கோடியாக இருந்தது. 2021 ஜனவரி முதல் மார்ச் வரை வங்கிகளால் கைவிடப்பட்ட வாராக்கடன்கள் ₹70,000 கோடிக்கு மேல் என்று அண்மையில் ஊடகங்கள் தெரிவித்தனர். அதாவது, 2020-21 ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட வாராக்கடன்கள் சுமார் ₹1.85 லட்சம் கோடி. ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2021 வரை எட்டு ஆண்டு கால இடைவெளியில் கைவிடப்பட்ட வாராக்கடன்கள், ₹10.83 லட்சம் கோடி. இந்த புள்ளிவிவரங்களின் அர்த்தம் என்ன?

கைவிடப்பட்ட கடன் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளுதல் இங்கு மிக மிக அவசியம். ஒரு வாராக்கடனை நான்கு ஆண்டுகளுக்கு பின் வங்கியின் கணக்கிலிருந்து தூக்கி விடுவார்கள். ஒரு வருடம் ‘தரமற்ற சொத்து’ (substandard asset) ஆகவும், மூன்று ஆண்டுகள் ‘சந்தேகத்திற்குரிய சொத்து’ (doubtful asset) ஆகவும் அந்த வங்கியின் கணக்கில் நான்கு  ஆண்டுகள் அந்த கடனை குறிப்பிட்டு இருப்பார்கள். வாராக்கடனினால் ஏற்படும் நஷ்டத்துக்கு ஒரு வங்கி நான்கு ஆண்டுகளில் போதுமான பணத்தை ஒதுக்க வேண்டும். ஒரு வங்கி நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அந்த கடனை வசூலிக்க இயலாது என்று எண்ணினால், முன்கூட்டியே கைவிட்டுவிடலாம்.

இவ்வாறு செய்வதால் என்ன பயன்? மார்ச் 2020 நிலவரப்படி வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன்கள் ₹8.96 லட்சம் கோடியாக இருந்தது. அந்த ஆண்டின் போது, வங்கிகள் ₹1.85 லட்சம் கோடி வாராக்கடன்களை கைவிட்டனர். அதாவது வங்கிகளின் வாராக்கடன்கள் ₹7.11 லட்சம் கோடியாக குறைந்திருக்க வேண்டும். வங்கிகள் மேலும் சில வாராக்கடன்களை மீட்டெடுக்க வாய்ப்பு உண்டு; இதனால் வங்கிகளின் வாரக்கடன்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு.

ஆனால், நமக்கு தெரிந்தபடி, மார்ச் 2021 நிலவரப்படி, வங்கிகளின் வாராக்கடன்கள் ₹8.35 லட்சம் கோடியாக இருந்தது. இங்கு என்ன நடந்திருக்கிறது? அடிப்படையில், இந்த ஆண்டின் போது வங்கிகளின் புதிய வராக்கடன்கள் முடிவடைந்தன. இது வாராக் கடன்களை ₹8.35 லட்சம் கோடியாக உயர்த்தியது. வங்கிகள் தொடர்ந்து புதிய வாராக் கடன்களைக் குவித்து வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கைவிடுவது என்பது ஒட்டுமொத்த வாராக்கடன் எண்களைக் குறைக்க உதவுகிறது. இந்த நடைமுறை இருப்பதை காட்டிலும் நிகழ்வு மிக சிறப்பாக உள்ளதாக காட்ட உதவுகிறது.

மார்ச் 2018 முதல் மார்ச் 2021 வரை, ₹6.6 லட்சம் கோடி மதிப்புள்ள வாராக்கடன்கள் கைவிடப்பட்டன. ஆயினும்கூட, வாராக்கடன்களின் உண்மையான குறைப்பு ₹2.36 லட்சம் கோடியாக இருந்தது (₹10.36 லட்சம் கோடி-₹8.35 lakh லட்சம் கோடி). புதிய வாராக் கடன்களின் குவிப்பு தொடர்கிறது என்பதை இது குறிக்கிறது. ரிசர்வ் வங்கியும் இதையேதான் குறிப்பிட்டுள்ளது – வாராக்கடன்களின் குறைப்பு பெரும்பாலும் நான்கு ஆண்டுகளுக்கும் மேலான கடன்களை கைவிட்டதன்  மூலம் எட்டப்பட்டது..

கடந்த எட்டு ஆண்டுகளில் கைவிடப்பட்ட மொத்த வாராக்கடன்கள் ₹10.83 லட்சம் கோடி. மார்ச் 2021 நிலவரப்படி, ₹8.35 லட்சம் கோடி வாராக்கடன்களில் இதைச் சேர்த்தால், மொத்த வாராக்கடன்களின் எண்ணிக்கை ₹19.18 லட்சம் கோடி. 2000-01 மற்றும் 2012-13 க்கு இடையில் பொதுத்துறை வங்கிகளால் (public sector banks) கைவிடப்பட்ட கடன்களிலிருந்து மொத்த மீட்பு 23.4%. ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2018 வரை, பொதுத்துறை வங்கிகளால் கைவிடப்பட்ட கடன்கள் சுமார் ₹3.17 லட்சம் கோடி ரூபாய். இதில், முன்பு கைவிடப்பட்ட சுமார் ₹44,900 கோடி கடன்கள் அல்லது சுமார் 14% மீட்கப்பட்டுள்ளன.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், வங்கிக்கடன் கைவிடப்படுதல் (write-off) மற்றும் தள்ளுபடி செய்யப்படுதலில் (loan waiver) பெரிய வேறுபாடு  இல்லை.

Source: Newslaundry

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...