நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக டெபாசிட் இல்லாத 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை அளிப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு மே 1-ம் தேதியன்று பிரதமரின் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டு, 2019-ம் ஆண்டு செப்டம்பரில் அதன் இலக்கு எட்டப்பட்டது.
வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது ரூ.64,637 கோடி மதிப்பிலான கடனைத் திருப்பிச் செலுத்தாததால், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான வங்கிகள் ஜனவரி 2018-ல் திவால் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.
வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் கிரிப்டோ கரன்சியால் வந்த வருமானத்திற்கு 30 சதவிகிதம் வரியும், செஸ் மற்றும் சர்சார்ஜ்ஜூம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக ஒரு ’காலம்’ உருவாக்கப்படும் என்றும், அரசாங்கம் கிரிப்டோவை முறைப்படுத்துவதற்காக செயல்முறையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தருண் பஜாஜ் கூறியுள்ளார்.
HDFC வங்கியின் துணைத்தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான கெக்கி. எம். மிஸ்திரி தெரிவிக்கும்போது, ஒருங்கிணைந்த அடிப்படையில், நிறுவனம் 13 சதவீதம் நிகர வருமானம் ரூ. 31,308 கோடியில் ரூ. 5,837 கோடியாக உயர்ந்துள்ளது. காலாண்டில் நிகர வட்டி வருவாயின் முக்கிய லாப அளவீடு ரூ.4,005 கோடியிலிருந்து ரூ.4,284 கோடியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
வரி வசூல், மின் நுகர்வு, வாகனப் பதிவுகள், நெடுஞ்சாலை சுங்கவரி வசூல் மற்றும் இ-வே பில்கள் போன்ற பொருளாதார குறிகாட்டிகளின் முன்னேற்றம் பரந்த அளவில் உள்ளது. இது Q3 FY22 இன் போது பணப்பட்டுவாடா மற்றும் வசூல்களின் மீட்சிக்கு வழிவகுத்தது என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.