செய்தி

ரிலையன்ஸ் மீதான ஃபியூச்சர் குழுமத்தின் மனுக்கள் தள்ளுபடி !

செவ்வாயன்று தில்லி உயர் நீதிமன்றம் ஃபியூச்சர் குழுமத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தது – ரிலையன்ஸ் உடனான அமேசானின் ஆட்சேபனைகளைத் தீர்ப்பது குறித்து நடுவர் மன்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான அதன் விண்ணப்பத்தை முடிவு செய்ய அமேசான் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்திற்கு (SIAC) விண்ணப்பித்தது. தகவலறிந்த வட்டாரங்கள், அமேசானின் வழக்கு, ஒப்பந்தக் கடமைகள் தவறியதற்குப் பரிகாரம் தேடுவது உண்மையானது என்றும் பணப் பற்றாக்குறையில் உள்ள ஃபியூச்சர் குழுமம் உயர் மன்றத்தை அணுகி தீர்வு காண வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தன.

எலான் மஸ்க்கின் “ஸ்டார் லிங்க்”கில் இருந்து சஞ்சய் பார்கவா விலகல் !

இந்தியத் தொலைத் தொடர்புத்துறை மற்றும் கட்டுப்பாட்டாளர், நாட்டில் செயற்கைக் கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் முன்பதிவு செய்ததற்காக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தைக் கண்டித்ததின் பின்னணியில் அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவை கவனித்து வரும் சஞ்சய் பார்கவா திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Q3 இல் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்யவிருக்கும் இந்திய IT நிறுவனங்கள் !

இந்திய தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையின் (Information Technology) அக்டோபர்-டிசம்பர் (Q3) காலாண்டு வளர்ச்சி குறைந்து இருக்கிறது, ஏனெனில் அதன் பெரும்பான்மை சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பணிநீக்கங்கள் தாராளமாக உள்ளன. ஆனால் நிதியாண்டு 22 இன் மூன்றாவது காலாண்டு இதற்கு விதிவிலக்காக இருக்கும், அதிகரித்த பணியமர்த்தல், சம்பள உயர்வு மற்றும் குறைந்த வேலை நாட்கள் ஆகியவை துறையின் வளர்ச்சியை பாதிக்கலாம், மேலும் பல ஆய்வாளர்கள் டாலருடன் ஒப்பிடும்போது ரூபாய் வீழ்ச்சிக்கு இது உதவலாம் என்று கூறுகின்றனர்.

இனி வாட்சப் வழியாகவும் செபியின் (SEBI) சம்மன் வரலாம் !

இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இப்போது வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல், போன்ற உடனடி செய்தி தளங்கள் மூலம் பத்திரச் சட்டக் குற்றவாளிகளுக்குக்கு, சம்மன்கள் மற்றும் உத்தரவுகளை அனுப்பும் செயல்முறைகளை விரைவாகவும் திறமையாகவும் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது மின்னணு அஞ்சல், பதிவு அஞ்சல், கூரியர் மற்றும் தொலைநகல் உள்ளிட்ட வழக்கமான தகவல் தொடர்பு முறைக்கு கூடுதலான சேவையாக இருக்கும்.

05/01/2022 – 60,000 புள்ளிகளைத் தாண்டி சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 60,008.88 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 66.05 புள்ளிகள் அதிகரித்து 59,921.98 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 14.84 புள்ளிகள் அதிகரித்து 17,820.10 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 103.40 புள்ளிகள் அதிகரித்து 36,943.55 ஆக வர்த்தகமானது.

Popular

Subscribe

spot_imgspot_img