சீனாவை சேர்ந்த மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் Huawei. இது மொபைல் ஃபோன், டிவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. Huawei நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது.
பேட்டரி எலெக்ட்ரிக் சிஸ்டமான பி-வோல்ட் கிட்டத்தட்ட மணிக்கு 600 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்றும் இதைக் கொண்டு 6 முதல் 8 பேர் வரை 80 நாட்டிகல் மைல் வரை பறக்கலாம் என்று ராப் வாட்சன் குறிப்பிட்டுள்ளார்.
நாஸ்காமின் சமீபத்திய அறிக்கையின்படி, நிதியாண்டில் 15.5% வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என NASSCOM அறிக்கை தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ.76,000 கோடி முதலீட்டை இலக்காகக் கொண்டு, நாட்டில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே போர்டு உற்பத்திக்கான பிஎல்ஐ (PLI) திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆலை அமைக்கும் இடத்தை இறுதி செய்ய சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கிரிப்டோ கரன்சிகள் எனப்படும் மெய்நிகர் பணம் என்பது ஒரு பொருளோ, சொத்தோ கிடையாது. அவை பணம் போன்றவையும் அல்ல. அதற்கென உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.