2021 டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3-வது காலாண்டில், 11.450.80 கோடி உயர்ந்து, தற்போது உள்ள Tech Mahindra-வின் நிகர லாபம் 1.378.20 கோடியாக பதிவாகியுள்ளது. அந்த காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 9.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.886.40 கோடியாக இருந்தது. அந்நிறுவனத்தின் EBITDA 2021 டிசம்பர் 3 ஆம் காலாண்டில் 8.7% அதிகரித்து 2,060 கோடி ரூபாயாக உயர்ந்தது. EBITDA 2021 ஆம் ஆண்டின் Q2 இல் 18.3% ஆக இருந்தது.
கூகுள் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சேவைகளை அளித்து வர்த்தகத்தை பெருக்க முடியும் என்று திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறது. இதற்காக, Smart Phone-களுக்கான சிறப்பு Andriod தொழில் நுட்பத்தையும் கூகுள் உருவாக்கியுள்ளது.
Prepaid Plan-களின் செல்லுபடியாகும் காலஅளவு 30 நாட்களாவது இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. Voucher, Special Tariff Voucher, Combo Voucher ஆகியவற்றில் தலா ஒன்றின் செல்லுபடியாகும் காலத்தையாவது 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 57898.96 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 518 புள்ளிகள் அதிகரித்து 57,795.11 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 98.14 புள்ளிகள் அதிகரித்து 17,208.30 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 264 புள்ளிகள் அதிகரித்து 38,246.60 ஆகவும் வர்த்தகமானது.
உலகின் இரண்டாவது மொபைல் சந்தையான இந்தியாவில், தற்போது சீன நிறுவனங்களான Xiaomi, Vivo, Oppo மற்றும் Realme ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆப்பிள் மற்றும் சாம்சங் முன்னணியில் உள்ள அரசாங்கத்தின் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தால் உள்ளூர் மொபைல் ஃபோன் அசெம்பிளி கணிசமாக உயர்ந்துள்ளது.