கடனில் தவிக்கும் குடும்பங்கள், கோவிட் மரணங்களை ஏற்க மறுக்கும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் – பதற வைக்கும் ரிப்போர்ட்!

Date:

இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பொறுத்தவரை கோவிட் பெருந்தொற்று ஒரு பெரிய விஷயமில்லை போலிருக்கிறது, கோவிட் மரணங்களை ஏற்க மறுக்கும் இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகளை நிராகரிக்கின்றன. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஏற்கனவே காப்பீட்டுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள நோய்களை மட்டுமே பரிசீலிக்க விரும்புகின்றன, கோவிட்-19 பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பட்டியலில் இல்லை. 2020 முன்பாக, ஆபத்தான நோய்களை உள்ளடக்கிய காப்பீட்டு நன்மைகளைப் பெற்றுத்தரும் பல இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காப்பீடு செய்து கொண்டவர்கள், கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமுற்ற பிறகு, அவர்களது குடும்பங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அவர்கள் கடன் சுழலுக்குள் தள்ளப்படுகிறார்கள்.

நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், இந்தக் காப்பீடுகள் வங்கி ஏஜென்ட்டுகளால் அடமானக் கடன்களை ஈடு செய்வதற்காக விற்கப்படுகின்றன, நோய் அல்லது விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டால் வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீட்டுக் கோரிக்கைகளை மறுப்பதால் குடும்பங்கள் கடன் சுமையில் வீழ்ந்து சீரழிகின்றன. தனியார் காப்பீட்டு நிறுவனமான HDFC எர்கோ, கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது, நோயால் இறந்த அடமான காப்பீட்டு பாலிசிதாரரின் குடும்பத்திற்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது “குறிப்பிடப்பட்ட (கோவிட்-19 செப்சிஸ்) நோயானது, பாலிசியின் விதிமுறைகளின் கீழ் பட்டியலிடப்பட்ட ஆபத்தான நோய்களின் கீழ் வரவில்லை, எனவே இந்த காப்பீட்டு உரிமை கோரலானது மேற்கூறிய காரணத்தால் நிராகரிக்கப்படுகிறது.”

புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, ஸ்க்லேரோசிஸ், பக்கவாதம் மற்றும் இதய வால்வு மாற்று போன்ற ஆபத்தான நோய்கள் மட்டுமே காப்பீட்டு உரிமை கோரல்களுக்குத் தகுதியுடைய ஒன்பது நோய்கள் என்று HDFC எர்கோ பட்டியலிடுகிறது.

“வீட்டுக் கடன்களுடன் தொடர்புடைய முக்கியமான காப்பீட்டுக் கொள்கையில் பட்டியலிடப்பட்டுள்ள முக்கியமான நோய்களை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த வரம்பிற்குள் வராத நோய்களைக் குறித்து பரிசீலனை செய்யவோ, காப்பீட்டுத் தொகை வழங்கவோ அனுமதியில்லை” என்று HDFC எர்கோ செய்தித் தொடர்பாளர் எக்கனாமிக் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஹெல்த்  இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் பாலிசிகளில் ஆபத்தான நோயாக 8 முதல் 20 மருத்துவ நிலைகளின் பட்டியலை மட்டுமே கொண்டுள்ளனர் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இரண்டாவது அலையைத் தொடர்ந்து அதிகரித்து வரும் இறப்பு விகிதங்களுக்கு மத்தியில் இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீட்டு உரிமை கோரல் செயல் முறைகளை மேலும் கடுமையாக்கி வருகின்றன.

22 ஆம் நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், ஜூலை இறுதி வரை, பொதுக் காப்பீட்டுக் கவுன்சிலால் தொகுக்கப்பட்டு, எக்கனாமிக் டைம்ஸால் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி, ₹13,804 கோடி மதிப்புள்ள மொத்தம் 12 லட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேலான கோவிட் காப்பீட்டுக் கோரிக்கைகள் பொது மற்றும் சுகாதார காப்பீட்டு நிறுவனங்களில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ₹9,178 கோடி மதிப்புள்ள 9,40,000 கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளன. 21 நிதியாண்டில், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ₹14,560 கோடி மதிப்புள்ள 9,80,000 கோவிட் உரிமை கோரல்களைப் பெற்றனர், அவற்றில் ₹7,833 கோடி மதிப்புள்ள 8,40,000 கோரிக்கைகளுக்கான இழப்பீடுகளை அவர்கள் தீர்த்தனர். ₹10,603 கோடி மதிப்புள்ள 3,30,000 கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. காப்பீட்டாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் விசாரணைகளின் அடிப்படையில் காப்பீட்டுத் தீர்வுகளை வழங்கலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. 22ஆம் நிதியாண்டில், ₹389 கோடி மதிப்புள்ள 49,452 கோவிட்-19 தொடர்பான காப்பீட்டுக் கோரிக்கைகள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளன.

“கொரோனா வைரஸ் தொடர்பான காப்பீட்டுக் கோரிக்கைகளுக்கு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் முழுத் தொகையையும் செலுத்தும் ஒரே நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். பெரும்பாலான நாடுகளில், இந்த மசோதா இன்னும் நிறைவேறாத நிலையில் தானிருக்கிறது” என்று நிவா பூபா எச்.ஐ.யின் தலைமை நிர்வாகி கிருஷ்ணன் ராமச்சந்திரன் கூறினார், (முன்பு இது மேக்ஸ் பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் என்றழைக்கப்பட்டது).

காப்பீட்டுத் துறை மிகக் கடுமையான பணியைச் செய்துள்ளது, கோவிட் உரிமை கோரல்கள் பற்றிய புள்ளிவிவரங்களை ஒரு ஆழமான பகுப்பாய்வு செய்வது காலத்தின் தேவை, ஏனெனில் தீர்வுத் தொகைக்கான இணைக்கட்டண வரம்புகள், மருத்துவமனை அறை வாடகைகள் மற்றும் பிற அம்சங்களைக் குறிப்பிடும் கொள்கை வடிவமைப்புகளின் ஒரு கூட்டு வடிவமாக இது இருக்கிறது.”

Credits – Business Standard

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...