SEBIயின் முதல் பெண் தலைவர் – மாதபி பூரி புச் நியமனம்..!!

Date:

பங்குச் சந்தை அமைப்பான செபியின் புதிய முதல் பெண் தலைவராக மாதபி பூரி புச் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி, செபியின் தலைவராக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான அஜய் தியாகியின் பதவிக் காலம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் அஜய் தியாகியின் பதவிக் காலம் 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், 2022 பிப்ரவரி 28-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், செபி அமைப்பின் புதிய தலைவராக மாதபி பூரி புச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், செபியின் முழுநேர உறுப்பினராக பணியாற்றி வந்த மாதபி பூரி புச், 1989-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் தனது பணியை தொடங்கினார். கார்ப்பரேட் ஃபைனான்ஸ், பிராண்டிங், நிதிப்பிரிவு, கடன் பிரிவு ஆகியவற்றிலும் பணிபுரிந்துள்ளார்.

2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஐசிஐசிஐ வங்கியுடைய பங்குச் சந்தை பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், பங்குச் சந்தை தொடர்பான பல்வேறு அமைப்புகளிலும் பணியாற்றிய அனுபவம் உடையவர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...