5G ஏலத்துக்கான பரிந்துரைகளை மார்ச் மாதத்துக்குள் சமர்ப்பிப்பதாக டிராய் தெரிவித்துள்ளதாகவும், தொலைத்தொடர்புத் துறை (DoT) ஏலத்தை விரைவில் நடத்துவதற்கான பிற செயல்முறைகளை ஒரே நேரத்தில் உறுதிப்படுத்தி வருவதாகவும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
"4G ஸ்பெக்ட்ரம், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் BSNL-ன் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான மூலதன உட்செலுத்தலுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3-வது காலாண்டில், 11.450.80 கோடி உயர்ந்து, தற்போது உள்ள Tech Mahindra-வின் நிகர லாபம் 1.378.20 கோடியாக பதிவாகியுள்ளது. அந்த காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 9.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.886.40 கோடியாக இருந்தது. அந்நிறுவனத்தின் EBITDA 2021 டிசம்பர் 3 ஆம் காலாண்டில் 8.7% அதிகரித்து 2,060 கோடி ரூபாயாக உயர்ந்தது. EBITDA 2021 ஆம் ஆண்டின் Q2 இல் 18.3% ஆக இருந்தது.
கூகுள் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சேவைகளை அளித்து வர்த்தகத்தை பெருக்க முடியும் என்று திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறது. இதற்காக, Smart Phone-களுக்கான சிறப்பு Andriod தொழில் நுட்பத்தையும் கூகுள் உருவாக்கியுள்ளது.
2021 டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்ஸின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.3,486 கோடியிலிருந்து 8.86 சதவீதம் அதிகரித்து ரூ.3,795 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.19,475 கோடியாக இருந்த காலாண்டின் செயல்பாடுகளின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு (YOY) 5.76 சதவீதம் அதிகரித்து ரூ.20,597 கோடியாக உள்ளது.