வர்த்தகப் போட்டிகள் காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.
கூகுள் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சேவைகளை அளித்து வர்த்தகத்தை பெருக்க முடியும் என்று திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறது. இதற்காக, Smart Phone-களுக்கான சிறப்பு Andriod தொழில் நுட்பத்தையும் கூகுள் உருவாக்கியுள்ளது.
Prepaid Plan-களின் செல்லுபடியாகும் காலஅளவு 30 நாட்களாவது இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. Voucher, Special Tariff Voucher, Combo Voucher ஆகியவற்றில் தலா ஒன்றின் செல்லுபடியாகும் காலத்தையாவது 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது.
2021 டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்ஸின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.3,486 கோடியிலிருந்து 8.86 சதவீதம் அதிகரித்து ரூ.3,795 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.19,475 கோடியாக இருந்த காலாண்டின் செயல்பாடுகளின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு (YOY) 5.76 சதவீதம் அதிகரித்து ரூ.20,597 கோடியாக உள்ளது.
வோடபோன் ஐடியா லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹7,230 கோடி நிகர நஷ்டத்தை வெள்ளிக்கிழமை அறிவித்தது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ₹4,532 கோடியாக இருந்த நஷ்டம், இந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ₹7,132 கோடியாக அதிகரித்துள்ளது.