இமயமலை சாமியார் என்று கூறி கொண்டு, ஆனந்த் சுப்ரமணியன் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் சுப்ரமணியன் தன்னை இமயமலை சாமியார் என தன்னை கூறிக் கொண்டு, இ-மெயில் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
கோ- லொகேஷன் எனப்படும் கணிணிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் சர்வர் கட்டமைப்பு வெளியாட்களால் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட வழக்கில் NSE-யின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தை துஷ்பிரயோகத்தைத் தடுக்க, பரிவர்த்தனைகளை கையாளுதல் நடைமுறைகளை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தியுள்ளதாக NSE எனப்படும் தேசிய பங்குச் சந்தை அமைப்பு தெரிவித்துள்ளது.
தேசிய பங்குச் சந்தை தொடர்பாக விவரங்களை முன்கூட்டியே முகவர்களுறுக்கு கசிய விட்டதாகவும், தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் எழுந்துள்ள புகாரின் அடிப்படையில். சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்துள்ளனர்.