மந்தமான கிராமப்புற தேவைகள், உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பு, விலை உயர்வு, பணவீக்கம் , இலங்கை நெருக்கடி போன்ற காரணங்களால் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகிறது. 2017-18ல் 35.7 மில்லியன் டன்னாக இருந்து, அடுத்த ஆண்டில் 34.2 மில்லியன் டன்னாகவும், 2019-20ல் 32.2 ஆகவும், 2020-21ல் 30.5 மில்லியன் டன்னாகவும் குறைந்துள்ளது.
ஏப்ரல் 2022 முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 170 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொகுப்பைப் பற்றி வரும் வாரங்களில் வங்கியின் குழுவுடன் விவாதிக்க இருப்பதாகவும், உலக வங்கி தலைவர் கூறினார்.
மார்ச் முதல் வாரத்தில், நிஃப்டி இதுவரை இல்லாத உச்சத்தை விட 14% சரிந்தது. பல பங்குகள், குறிப்பாக மிட்கேப்கள் மற்றும் ஸ்மால்கேப்கள், 50 சதவீதத்துக்கு மேல் சரிந்தன.