உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் எலான் மஸ்க் இருக்கிறார்.
ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில் 29 பில்லியன் டாலர் இழப்புக்குப் பிறகு, இந்திய வணிக த்தில் ஆதிக்கம் செலுத்தும் ராஜாக்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானிக்கு கீழே ஸுக்கர்பெர்க் பன்னிரண்டாவது இடத்தில் உள்ளார்.
டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி பெறுவதில் உள்ள சவால்களை எலான் மஸ்க் தனது ட்வீட் பக்கத்தில் வெளியிட்ட பிறகு, இரண்டு மாநில அரசாங்கங்களிடமிருந்து வியக்கக்கூடிய சலுகைகளைப் பெற்றுள்ளார். ஜனவரி 13ந் தேதியன்று, எலன் மஸ்க் இந்தியாவில் தனது டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கான உற்பத்தி அலகுகளை அமைப்பதற்காக அரசாங்கத்துடன் நிறைய சவால்களைச் சந்தித்து வருவதாக ட்வீட் செய்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து குறைந்தது நான்கு மூத்த அமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்க மஸ்கிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தியத் தொலைத் தொடர்புத்துறை மற்றும் கட்டுப்பாட்டாளர், நாட்டில் செயற்கைக் கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் முன்பதிவு செய்ததற்காக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தைக் கண்டித்ததின் பின்னணியில் அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவை கவனித்து வரும் சஞ்சய் பார்கவா திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.