அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் அதன் உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால், வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகளிலிருந்து இது பயனடையும்.
பாகிஸ்தான் நாட்டின் சியால்கோட் நகரத்தை சேர்ந்த Mahashian Di Hatti Private Limited நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. MDH என்று பரவலாக அறியப்பட்ட இந்நிறுவனம் பல்வேறு மசாலா பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும்போது, தொழில்துறையின் போக்குகள் கிராமப்புறங்களின் தேவை குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கான காரணங்கள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மூன்றாவது காலாண்டை பொறுத்தவரை, அதன் வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து குறைவாக உள்ளன. ஆனால், பொருட்களின் தயாரிப்பு விலை அதிகரிப்பால் வருவாய் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
இனி நுகர்வோர் பிஸ்கட் முதல் ஷாம்பூ வரை மிக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் 2022ஆம் ஆண்டு, எஃப்எம்சிஜி வகைகளைப் பொறுத்து 4 முதல் 20 சதவீதம் வரை விலைகளை உயர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில காலாண்டுகளாக உற்பத்திச் செலவுகள், கச்சா எண்ணெய், பாமாயில், சர்க்கரை போன்ற மூலப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்து வரும் கோவிட்-19 மூன்றாம் அலைக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், சப்ளை இடையூறு ஏற்படாமல் இருக்க, உணவு நிறுவனங்களும் அவற்றின் டீலர்களும் விநியோகஸ்தர்களும் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தேநீர் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். ஃபார்ச்சூன் பிராண்டின் சமையல் எண்ணெய்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அதானி வில்மர், அதன் 92 கிடங்குகளில் 12 நாட்களுக்குத் தேவையான சரக்குகளை வைத்திருப்பதாகவும், இது சாதாரண இருப்புக் காலத்தை விட 10 நாட்கள் கூடுதலாக இருப்பதாகவும் நிர்வாக இயக்குநர் ஆங்ஷு மல்லிக் கூறினார்.