சென்னையில் இன்று(29.03.2022) ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 67 காசுகள் உயர்ந்து 96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.
பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், பொதுத்துறை பெட்ரோலிய நிலையங்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது.
கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலரை தாண்டியபோதும், ஒரு டாலருக்கு ரூபாய் 77-ஆக பலவீனமடைந்தபோதும், மத்திய அமைச்சர்கள் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் முகாமிட்டிருந்தனர் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.