வழக்கமாக மாதத்தின் முதல் நாளன்று LPG எனப்படும் வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றி அமைக்கப்படும். ஆனால், 2021 அக்டோபர் மாதத்துக்கு பிறகு சமையல் எரிவாயு உருளையின் விலை மார்ச் 10-ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிகப்படும் வரை மாற்றம் செய்யப்படவில்லை.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக டெபாசிட் இல்லாத 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை அளிப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு மே 1-ம் தேதியன்று பிரதமரின் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டு, 2019-ம் ஆண்டு செப்டம்பரில் அதன் இலக்கு எட்டப்பட்டது.