மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக ஒரு நாளைக்கு 3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா நிறுத்தக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) கூறியுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் சீனாவில் புதிய கோவிட் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் (OPEC) உறுப்பினரான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக கூறியதை அடுத்து, புதன்கிழமை விலை குறைந்தது.
சந்தை கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, 51 நிறுவனங்கள் ஐபிஓக்கள் மூலம் ரூ.77,000 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளதாக ’பிரைம் டேட்டாபேஸ்’ தெரிவித்துள்ளது. இதில் இந்திய அரசு நடத்தும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் உட்பட 44 நிறுவனங்கள் இல்லை
உக்ரைன் மீது போர் தொடுத்துள் ளரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன. ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் கோதுமை, சோளம், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட நின்று போய் விட்டது.