யுனிலீவர் பிஎல்சி மற்றும் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனின் இந்திய யூனிட்கள் முதல் உள்நாட்டு JSW ஸ்டீல் லிமிடெட் வரையிலான நிறுவனங்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து எரிசக்தி செலவுகள் அதிகரித்ததால், உலகளாவிய விநியோக அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக விலைகளை உயர்த்துகின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், கொரோனாவல் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பணவீக்கமும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 3 புள்ளி 6 சதவீதத்திலிருந்து 2 புள்ளி 6 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.