உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த நெருக்கடியை சமாளிக்க எந்தெந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து இனிமேல் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனம் ரஷ்யாவுடனான தங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்த உள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்காவும், அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியது. இதன் காரணமாக எண்ணெய் விலை 2008 –ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக உயர்ந்தது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.