இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் தனது ரூ. 4,300 கோடி ஃபாலோ-ஆன் பொது வழங்கலில் (FPO) பங்கு பெற்ற முதலீட்டாளர்களுக்கு எஸ்எம்எஸ்கள் மூலம் தங்கள் ஏலத்தை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ருச்சி சோயா ஒரு பன்முகப்படுத்தப்பட்ட FMCG மற்றும் FMHG மையப்படுத்தப்பட்ட நிறுவனமாகும். இது மிகப்பெரிய பிராண்டட் ஆயில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி ஏற்கனவே அதன் IPO-ஐ வெளியிடுவதற்கு செபியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஆனால், பாதகமான சந்தை நிலைமைகள் மற்றும் பங்கு விற்பனைக்கான மந்த நிலைமை ஆகியவற்றைக் காரணம் காட்டி வணிக வங்கியாளர்கள் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக நாள்தோறும் பங்குச் சந்தையில் ஏற்ற..இறக்கங்கள் காணப்படுகிறது. இதனால், எல்ஐசி ஐபிஓக்கள் விற்பனை மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு இல்லை என்றும், ஆனால், மே 12-ம் தேதி வரை அரசுக்கு அவகாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.