பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சலில் பரேக் கூறுகையில், தொழில்நுட்பத் துறையில் பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்து கொண்டுள்ளன. ஆனால் குறுகிய காலத்தில் புதிய திறன்களைக் கற்க வேண்டிய ஒரு தொழிலாக இது இருக்கும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாஸ்காமின் சமீபத்திய அறிக்கையின்படி, நிதியாண்டில் 15.5% வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என NASSCOM அறிக்கை தெரிவித்துள்ளது.
Covid-19 கொரோனா, ஒமிக்ரான் பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பணிக்கு செல்ல வேண்டியது அவசியமானதாக உள்ளது.
பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், வருமான வரி தாக்கல் செய்த பிறகு அதில் ஏதும் தவறுகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்வதற்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
காக்னிசண்ட் நிறுவனம் 2021- ஆம் ஆண்டில், வருவாயில் 10% ஆண்டுக்கு வளர்ச்சியை கண்டு $18.5 பில்லியனாக அறிவித்தது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, காக்னிசண்ட் நிறுவனம் முதல் முறையாக இரட்டை இலக்க வருடாந்திர வருவாய் வளர்ச்சிக்கு திரும்பியுள்ளது.