செபியின் ICDR விதிமுறைகளில் (மூலதனம் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) பரிந்துரைக்கப்பட்ட வெளியீட்டு விலை இருப்பதாக IiAS கூறியது. வெளியீட்டு விலையானது 90 நாள் வால்யூம் வெயிட்டேட் சராசரி மற்றும் 10 நாள் வால்யூம் வெயிட் சராசரியை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று விதி கூறுகிறது.
இந்த நிதி, பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம்லிமிடெட் ஆகியவற்றுடன் போட்டியிட வோடஃபோஃனுக்கு உதவும் என்றும், வெளி முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் நிதி பெறுவதை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நாணயப் பத்திரம் மூலம் அதிக அளவு நிதி திரட்டுவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இதில் இந்த ஆண்டு ஜனவரியில் திரட்டப்பட்ட USD 4 பில்லியன் மதிப்புள்ள ஜம்போ பத்திரங்களும் அடங்கும்.
5G ஏலத்துக்கான பரிந்துரைகளை மார்ச் மாதத்துக்குள் சமர்ப்பிப்பதாக டிராய் தெரிவித்துள்ளதாகவும், தொலைத்தொடர்புத் துறை (DoT) ஏலத்தை விரைவில் நடத்துவதற்கான பிற செயல்முறைகளை ஒரே நேரத்தில் உறுதிப்படுத்தி வருவதாகவும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.