காலாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி, இதுவரை இல்லாத அளவுக்கு மாதாந்திர கடன்களை அளித்துள்ளதாகவும், பணம் செலுத்தும் வணிகத்தில் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளதாவும் கூறியுள்ளது.
இணையதள பயன்பாடு மற்றும் அதிகரிக்கும் வருமானத்தின் பின்னணியில் 2030 -ஆம் ஆண்டுக்குள் 800 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சி காணும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Paytm Payment வங்கி வரும் ஜுன் மாதத்தில், சிறிய நிதி வங்கியை தொடங்குவதற்கான அனுமதி கேட்டு இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு வரை, பாரத்பே இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. Sequoia Capital, Tiger Global Management, Ribbit Capital, Coatue Management மற்றும் Beenext உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் சுற்றுகள் மூலம் புது தில்லியை தளமாகக் கொண்ட நிறுவனத்தை குரோவர் வழிநடத்தினார். இப்போது, குரோவரின் செல்வாக்கு குறைந்து விட்டதாகத் தெரிகிறது.