கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலரை தாண்டியபோதும், ஒரு டாலருக்கு ரூபாய் 77-ஆக பலவீனமடைந்தபோதும், மத்திய அமைச்சர்கள் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் முகாமிட்டிருந்தனர் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 3 புள்ளி 6 சதவீதத்திலிருந்து 2 புள்ளி 6 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.71 காசுகளுக்கும் விற்பனையாகிறது. நான்கே நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2.27 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.2.28 காசுகளும் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் புகழ் பெற்ற ஆட்டோ மொபைல் நிறுவனமான மாருதி சுசுகி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும், ஹரியானா மாநிலம் சோனிபாட் என்ற இடத்தில் புதிய, பெரிய கார் உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டு வருகிறது.