ரத்தன் டாடா குழுமத்தின் ஒரு அங்கமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக உள்ள டாடா மோட்டார்ஸ் பல்வேறு பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களை தயாரித்து வருகிறது. இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்தும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்தும் ஒன்றிய அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 4-ம் தேதி முதல், 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆன்டெலோபஸ் எனர்ஜி, ஒரு செலான் எக்ஸ்ப்ளோரேஷன் பங்குக்கு ரூ.200 செலுத்தி 21 சதவீத பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டதை அடுத்து, திங்களன்று செலான் எக்ஸ்ப்ளோரேஷன் பங்குகள் 20 சதவீத உயர்வை எட்டியது.
எல்ஐசி ஏற்கனவே அதன் IPO-ஐ வெளியிடுவதற்கு செபியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஆனால், பாதகமான சந்தை நிலைமைகள் மற்றும் பங்கு விற்பனைக்கான மந்த நிலைமை ஆகியவற்றைக் காரணம் காட்டி வணிக வங்கியாளர்கள் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.