69 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர்இந்தியாவை டாடா குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தையும், மத்திய அரசு, முறைப்படி வியாழக்கிழமையன்று டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.
Prepaid Plan-களின் செல்லுபடியாகும் காலஅளவு 30 நாட்களாவது இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. Voucher, Special Tariff Voucher, Combo Voucher ஆகியவற்றில் தலா ஒன்றின் செல்லுபடியாகும் காலத்தையாவது 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 57898.96 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 518 புள்ளிகள் அதிகரித்து 57,795.11 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 98.14 புள்ளிகள் அதிகரித்து 17,208.30 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 264 புள்ளிகள் அதிகரித்து 38,246.60 ஆகவும் வர்த்தகமானது.
வியாழக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு செவ்வாய்க்கிழமை ரூ.262.78 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.01 லட்சம் கோடி குறைந்து ரூ.258.77 லட்சம் கோடியாக இருந்தது.
இந்தியாவில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக எரிசக்தி, சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார கட்டம், துறைமுகங்கள், ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.