நீண்ட தூர போக்குவரத்திற்கு எல்என்ஜியை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 50 ஸ்டேஷன்கள் மற்றும் இறுதியில் 1,000 விற்பனை நிலையங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
கடந்த 8-ம் தேதியன்று நடந்த இந்திய ரிசர்வ் வங்கியின் பிந்தைய பணவியல் கொள்கை செய்தியாளர் சந்திப்பின் போது கவர்னர் சக்திகாந்த தாஸ், கடந்த சில கொள்கை கூட்டங்களை பார்க்கும்போது, இப்போது தவிர்க்க முடியாததாகி விட்ட சில கடினமான முடிவுகளுக்கு பங்குதாரர்களை தயார்படுத்துவது போல் தெரிகிறது.
ஒன்பது திட்டங்களில் மங்களூர் துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கொள்கலன் முனையங்களின் விரிவாக்கம் மற்றும் புதிய கொள்கலன் முனையத்தை இயந்திரமயமாக்குதல் உள்ளிட்ட பைப்லைனில் உள்ள மற்ற திட்டப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
அவ்வாறு வாங்கப்படும்போது IDFC Mutual Fund நிறுவனத்தின் மதிப்பு 4,500 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக, ஐடிஎஃப்சி மியூச்சுவல் ஃப்ண்ட் நிறுவனம் பங்குச்சந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.93 லட்சமும், ஐடிபிஐ வங்கிக்கு ரூ.90 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.