இதுதொடர்பாக Quantum Mutual Funds நிறுவனத்தின் நிதி மேலாளர் பங்கஜ் பதக் கூறும்போது, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி ஏற்கனவே வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் வரும் மாதங்களில் விகிதங்களை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக, 2022-ம் ஆண்டின், பெயின் & கோவின் இந்தியா வென்ச்சர் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் செய்ததைப் போலவே உள்ளூர் ஸ்டார்ட்அப் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்கள் இந்த ஆண்டும் நிதியைப் பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் தனது ரூ. 4,300 கோடி ஃபாலோ-ஆன் பொது வழங்கலில் (FPO) பங்கு பெற்ற முதலீட்டாளர்களுக்கு எஸ்எம்எஸ்கள் மூலம் தங்கள் ஏலத்தை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.