பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி (CMO) அமித் தோஷி கூறுகையில், நிறுவனத்தின் பணியாளர்களில் 38 சதவீதம் பேர் பெண்கள். கவுகாத்தி தொழிற்சாலையில், பெண்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது, அது 65 சதவீதமாக உயர்த்தப்படும் என்றார்.
இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உள்ள ஜெட் ஏர்வேஸ் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்குவதற்காக ஜெட் ஏர்வேய்ஸின் தாய் நிறுவனமாக கல்ராக் கேபிடல் முராரி லால் ஜலான் கன்சார்டியம் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரும்பு உற்பத்தி அதிகரிக்க சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.