வரி வசூல், மின் நுகர்வு, வாகனப் பதிவுகள், நெடுஞ்சாலை சுங்கவரி வசூல் மற்றும் இ-வே பில்கள் போன்ற பொருளாதார குறிகாட்டிகளின் முன்னேற்றம் பரந்த அளவில் உள்ளது. இது Q3 FY22 இன் போது பணப்பட்டுவாடா மற்றும் வசூல்களின் மீட்சிக்கு வழிவகுத்தது என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2020-ம் நிதியாண்டில், பழைய ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) இணைப்புக்கு பிறகு பஞ்சாப் நேஷனல் வங்கி , ஆயுள் காப்பீட்டில் பங்குகளை வாங்கியது. இணைப்புக்கு முன் OBC ஆனது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 23 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இது ஒன்றிணைந்ததன் மூலம் PNB-க்கு கிடைத்துள்ளது.
காக்னிசண்ட் நிறுவனம் 2021- ஆம் ஆண்டில், வருவாயில் 10% ஆண்டுக்கு வளர்ச்சியை கண்டு $18.5 பில்லியனாக அறிவித்தது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, காக்னிசண்ட் நிறுவனம் முதல் முறையாக இரட்டை இலக்க வருடாந்திர வருவாய் வளர்ச்சிக்கு திரும்பியுள்ளது.
இந்தியாவில் விவசாய உபகரணங்கள், பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றில் M&M குழுமமானது தலைமை வகிக்கிறது. இது உலகின் மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமாகும்.