கூகுள் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சேவைகளை அளித்து வர்த்தகத்தை பெருக்க முடியும் என்று திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறது. இதற்காக, Smart Phone-களுக்கான சிறப்பு Andriod தொழில் நுட்பத்தையும் கூகுள் உருவாக்கியுள்ளது.
LIC Housing Finance-இன் மொத்த போர்ட்ஃபோலியோவில், தனிநபர் கடன் போர்ட்ஃபோலியோ 12 சதவீதம் அதிகரித்து 2021 டிசம்பரில் ரூ.204,444 கோடியிலிருந்து ரூ.229,321 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் எம்டி மற்றும் சிஇஓ அனுப்ரதா பிஸ்வாஸ் கூறுகையில், Airtel Payments வங்கி இந்த ஆண்டில் இதுவரை 35 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
69 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர்இந்தியாவை டாடா குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தையும், மத்திய அரசு, முறைப்படி வியாழக்கிழமையன்று டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.
Prepaid Plan-களின் செல்லுபடியாகும் காலஅளவு 30 நாட்களாவது இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. Voucher, Special Tariff Voucher, Combo Voucher ஆகியவற்றில் தலா ஒன்றின் செல்லுபடியாகும் காலத்தையாவது 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது.