இந்த ஆண்டு முக்கிய பொருளாதாரங்களில் மிக விரைவான வேகத்தில் மீண்டு வரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அடுத்த மாதம் நடைபெறும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் கோவிட் பரவல் போன்றவை அவரது பட்ஜெட் பணியை சவாலானதாக ஆக்குகின்றன. சீதாராமனின் பட்ஜெட்டில் பொருளாதார வல்லுநர்கள், நிறுவனங்கள், வரி வல்லுநர்கள் மற்றும் இந்தியாவின் சம்பளம் பெறுபவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது
சோடியம் அயனில் முதலீடு செய்யத் தொடங்குவதன் மூலம், மற்றவர்கள் இதில் கவனம் செலுத்தாதபோது அம்பானி அதில் ஒரு பெரிய பகுதியைப் பிடிக்க முடியும்.
லித்தியம்-அயன் போலல்லாமல், சோடியம்-அயன் செல்கள் போக்குவரத்தில் வெடிக்கும் வாய்ப்பு குறைவு. இதற்கான ஃபேரடியனின் காப்புரிமை ரிலையன்ஸுக்கு ஒரு நன்மையை அளிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ, டிசம்பர் காலாண்டில் (Q3FY22) நிகர லாபத்தில் 25 சதவீதம் உயர்ந்து, ரூ. 6,194 கோடியாக இருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது, இதுவரை இல்லாத காலாண்டு லாபமாகும். இதன் மூலமாக 5,800 கோடி நிகர லாபம் கிடைக்கும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன் நிகர வட்டி வருமானம் கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.9,912 கோடியாக இருந்த நிலையில், 22ஆம் காலாண்டில் 23 சதவீதம் அதிகரித்து ரூ.12,236 கோடியாக உள்ளது.
ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் (FRL) இன் இயக்குநர்கள், ஜனவரி 29 தேதிக்குள் ₹3,500 கோடி செலுத்தும்படி அமேசானைக் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர்கள், வெள்ளிக்கிழமை அமேசானுக்கு எழுதிய கடிதத்தில், FRLக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், ஜனவரி 29, 2022க்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அது NPA (செயல்படாத சொத்து) என வகைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.