அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், Reliance Industries நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருடைய நிகர சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலராக உள்ளது.
கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய அதானி, 1980-களின் முற்பகுதியில் மும்பையின் வைரத் தொழிலில் தனது அதிர்ஷ்டத்தை முதன்முதலில் முயற்சித்தார். 1988ல் அதானி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் பிணைக் கைதிகளில் ஒருவராக இருந்தார்.
சோடியம் அயனில் முதலீடு செய்யத் தொடங்குவதன் மூலம், மற்றவர்கள் இதில் கவனம் செலுத்தாதபோது அம்பானி அதில் ஒரு பெரிய பகுதியைப் பிடிக்க முடியும்.
லித்தியம்-அயன் போலல்லாமல், சோடியம்-அயன் செல்கள் போக்குவரத்தில் வெடிக்கும் வாய்ப்பு குறைவு. இதற்கான ஃபேரடியனின் காப்புரிமை ரிலையன்ஸுக்கு ஒரு நன்மையை அளிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் (FRL) இன் இயக்குநர்கள், ஜனவரி 29 தேதிக்குள் ₹3,500 கோடி செலுத்தும்படி அமேசானைக் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர்கள், வெள்ளிக்கிழமை அமேசானுக்கு எழுதிய கடிதத்தில், FRLக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், ஜனவரி 29, 2022க்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அது NPA (செயல்படாத சொத்து) என வகைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.