சில வாரங்களுக்கு முன்பு வரை, பாரத்பே இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. Sequoia Capital, Tiger Global Management, Ribbit Capital, Coatue Management மற்றும் Beenext உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் சுற்றுகள் மூலம் புது தில்லியை தளமாகக் கொண்ட நிறுவனத்தை குரோவர் வழிநடத்தினார். இப்போது, குரோவரின் செல்வாக்கு குறைந்து விட்டதாகத் தெரிகிறது.
கடந்த அக்டோபரில், பாரத்பே நிறுவனம் போலி விற்பனையாளர்களுக்கு விலைப்பட்டியல் வழங்கியதாகவும், இந்த போலி விற்பனையாளர்கள் BharatPe க்கு ஆட்சேர்ப்பு மற்றும் பிற சேவைகளை வழங்கினர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
நிறுவனத்தின் குழுவுக்கு மார்ச் 1-ஆம் தேதி அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில், பாரத்பேயின் முதலீட்டாளர்களும் வாரியமும் நிறுவனர்களை 'அடிமைகளாக' நடத்துவதாகவும், 'தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நிறுவனர்களை நீக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய, மேற்கிந்தியத் தீவுகளுக்கான கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கிய போட்டி 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் விளம்பரதாரராக(Sponser) Paytm நிறுவனம் உள்ளது. இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு Paytm ஒரு சலுகையை அறிவித்து, இன்ப அதிரச்சியை கொடுத்துள்ளது.