தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) ஆகியவற்றின் ரியல் எஸ்டேட் சொத்துக்களை கிட்டத்தட்ட ரூ.1,100 கோடி ரிசர்வ் விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இப்போது உள்ளது. இந்த நிலையில், குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிப்பது குறித்து ஆலோசிகக்கப்பட உள்ளது.
ஜீவன் அக்ஷய் VII (திட்டம் 857) மற்றும் ஜீவன் சாந்தி (திட்டம் 858) ஆகியவற்றின் வருடாந்திரத் திட்டங்களுக்கான விகிதங்களை எல்ஐசி திருத்தியுள்ளதாகவும், திருத்தப்பட்ட பதிப்பு, திருத்தப்பட்ட வருடாந்திர விகிதங்களுடன் பிப்ரவரி 1 முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் கிரிப்டோ கரன்சியால் வந்த வருமானத்திற்கு 30 சதவிகிதம் வரியும், செஸ் மற்றும் சர்சார்ஜ்ஜூம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக ஒரு ’காலம்’ உருவாக்கப்படும் என்றும், அரசாங்கம் கிரிப்டோவை முறைப்படுத்துவதற்காக செயல்முறையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தருண் பஜாஜ் கூறியுள்ளார்.
வரும் நிதியாண்டில், மூலதன செலவினத்தை 35.4% அதிகரித்து, ரூ.7.5 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9% உயர்த்துவதற்கு மத்திய அரசு நேற்று வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.