இதுகுறித்த புகாரின் பேரில், Hero MotoCorp நிறுவனம், அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பவன் முன்ஜால் மற்றும் பலரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் மூன்று நாட்கள்விரிவான சோதனைகளை நடத்தினர்.
இதுதொடர்பாக Quantum Mutual Funds நிறுவனத்தின் நிதி மேலாளர் பங்கஜ் பதக் கூறும்போது, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி ஏற்கனவே வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் வரும் மாதங்களில் விகிதங்களை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
சென்னையில் இன்று(29.03.2022) ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 67 காசுகள் உயர்ந்து 96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திருபாய் அம்பானியின் மறைவுக்கு பிறகு பிரித்து தரப்பட்ட சொத்தை வைத்து அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.