இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நாணயப் பத்திரம் மூலம் அதிக அளவு நிதி திரட்டுவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இதில் இந்த ஆண்டு ஜனவரியில் திரட்டப்பட்ட USD 4 பில்லியன் மதிப்புள்ள ஜம்போ பத்திரங்களும் அடங்கும்.
5G ஏலத்துக்கான பரிந்துரைகளை மார்ச் மாதத்துக்குள் சமர்ப்பிப்பதாக டிராய் தெரிவித்துள்ளதாகவும், தொலைத்தொடர்புத் துறை (DoT) ஏலத்தை விரைவில் நடத்துவதற்கான பிற செயல்முறைகளை ஒரே நேரத்தில் உறுதிப்படுத்தி வருவதாகவும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Prepaid Plan-களின் செல்லுபடியாகும் காலஅளவு 30 நாட்களாவது இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. Voucher, Special Tariff Voucher, Combo Voucher ஆகியவற்றில் தலா ஒன்றின் செல்லுபடியாகும் காலத்தையாவது 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது.
வோடபோன் இந்தியா அரசாங்கத்திடம் இருந்து ₹170 பில்லியன் வங்கி உத்தரவாதங்களை எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். "இது 2022 இல் மற்றொரு விலை உயர்வாக இருக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் நிச்சயமாக, ஒரு கட்டத்தில், விலை உயர்வு நடக்கும்" என்று டக்கர் தெரிவித்துள்ளார்.
2021 டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்ஸின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.3,486 கோடியிலிருந்து 8.86 சதவீதம் அதிகரித்து ரூ.3,795 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.19,475 கோடியாக இருந்த காலாண்டின் செயல்பாடுகளின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு (YOY) 5.76 சதவீதம் அதிகரித்து ரூ.20,597 கோடியாக உள்ளது.