அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களுடைய விலைகள் நிதிப்பற்றாக்குறையில் மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணைநிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகிறது. 2017-18ல் 35.7 மில்லியன் டன்னாக இருந்து, அடுத்த ஆண்டில் 34.2 மில்லியன் டன்னாகவும், 2019-20ல் 32.2 ஆகவும், 2020-21ல் 30.5 மில்லியன் டன்னாகவும் குறைந்துள்ளது.
பணம் செலுத்துதல் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம், 2007ன் பிரிவு 30ன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கட்டுப்பாட்டாளர் ஒரு வெளியீட்டில் தெரிவித்தார்.
ஏப்ரல் 2022 முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 170 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொகுப்பைப் பற்றி வரும் வாரங்களில் வங்கியின் குழுவுடன் விவாதிக்க இருப்பதாகவும், உலக வங்கி தலைவர் கூறினார்.