2022 பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில், இந்திய மதிப்பின்படி, சுமார், ரூ.20,700 கோடியிலிருந்து அதிகரித்து, சுமார் 47.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் தங்கப் பத்திர விற்பனையில், 999 சுத்தமான தன்மையுடைய ஒருகிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.5,109 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சி பற்றிய சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் அதிகரித்து வருவதால், ASCI , தொழில்துறை பங்குதாரர்கள், அரசு மற்றும் நிதிக் கட்டுப்பாட்டாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் புதிய வழிகாட்டுதல்களை இந்திய விளம்பரத் தரக்கவுன்சில்(ASCI) வெளியிட்டுள்ளது.