Covid-19 கொரோனா, ஒமிக்ரான் பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பணிக்கு செல்ல வேண்டியது அவசியமானதாக உள்ளது.
பல மாநிலங்களில் கோவிட் -19 நோய்த்தொற்றுக்காக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், சோப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட தினசரி அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை இணையவழி தளங்களில் அதிகரித்துள்ளது. கடைகளில் வரையறுக்கப்பட்ட பணி நேரத்தினால் நுகர்வோர் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இது அதிக ஆன்லைன் விற்பனைக்கு பங்களித்துள்ளது என்று பல நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.