டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரனை ஏர் இந்தியாவின் புதிய தலைவராக அறிவித்துள்ள டாடா குழுமம் அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. Tata Sons நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் டாடா ஹோல்டிங் உட்பட 100-க்கும் மேற்பட்ட டாடா குழும நிறுவனங்களை வழி நடத்தி வருகிறார்.
பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சலில் பரேக் கூறுகையில், தொழில்நுட்பத் துறையில் பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்து கொண்டுள்ளன. ஆனால் குறுகிய காலத்தில் புதிய திறன்களைக் கற்க வேண்டிய ஒரு தொழிலாக இது இருக்கும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
TCS-ன் வளர்ச்சிக்கு நிறுவனத்தின் பிராண்டின் முதலீடுகள் மற்றும் அதன் ஊழியர்கள், வாடிக்கையாளர் சமபங்கு மற்றும் வலுவான நிதிச் செயல்பாடு ஆகியவை காரணமாகும் என்று ஓரு அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐடி துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் இந்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக, தெரிவித்துள்ளன.