ரத்தன் டாடா குழுமத்தின் ஒரு அங்கமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக உள்ள டாடா மோட்டார்ஸ் பல்வேறு பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களை தயாரித்து வருகிறது. இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
பங்குச் சந்தை அமைப்பான செபியிடம் மாருதி சுசுகி நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2022 பிப்ரவரி மாதத்தில் 1,69,692 யூனிட்களை உற்பத்தி செய்துள்ளதாகவும், இது 2021-ம் ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 1,68,180 யூனிட்களாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக Electric Carகளை விற்பனை செய்து வரும் நிறுவனமாக Tata Motors நிறுவனம் உள்ளது. ஏற்கனவே Tata Motors-ன் Nexon Electric Car, Tigor Electric Car ஆகியவை சந்தையில் உள்ளன. தற்போது Tata Motors நிறுவனம் Nano அடிப்படையில் எலக்ட்ரிக் காரை சந்தைப்படுத்தியுள்ளது. Electra EV நிறுவனம் Tata Nano காரை தயாரித்து. அதனை ரத்தன் டாடாவுக்கு அளித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனங்களில் ரூ.3000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது அனைத்துத் துறைகளிலும் அவர்களின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.
தற்போது இந்தோனேஷியாவில், Yamaha Aerox 2022 மாடல் Scooter அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இது இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆறு புதிய வண்ணங்களுடன் 2022 மாடல் சந்தைக்கு வரவிருக்கிறது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.