சமீபத்தில் தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி.யாக அய்சியை நியமிப்பதாக டாடா சன்ஸ் பிப்ரவரி 14-ம் தேதி அறிவித்தது.
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, 69 ஆண்டுகளுக்குப் பிறகு, TATA குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி 27-ம் தேதி, ஏர் இந்தியா டாடா நிறுவனத்திடம், முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.
Air India நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக, மத்திய அரசு, அதனை தனியாருக்கு ஏலம் விட்டது. அதன்படி, Tata நிறுவனம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.
69 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர்இந்தியாவை டாடா குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தையும், மத்திய அரசு, முறைப்படி வியாழக்கிழமையன்று டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.