மே 4 முதல் 9-ம் தேதி வரை எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்வதன் மூலம் 21 ஆயிரம் கோடி நிதி திரட்ட நிறுவனம் முடிவெடுத்துள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களுடைய விலைகள் நிதிப்பற்றாக்குறையில் மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணைநிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகிறது. 2017-18ல் 35.7 மில்லியன் டன்னாக இருந்து, அடுத்த ஆண்டில் 34.2 மில்லியன் டன்னாகவும், 2019-20ல் 32.2 ஆகவும், 2020-21ல் 30.5 மில்லியன் டன்னாகவும் குறைந்துள்ளது.