விரைவில் எல்ஐசியின் ஐபிஓக்கள் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்காக விண்ணப்பித்த 22 நாட்களிலேயே LIC-க்கு பங்கு பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதி அளித்துள்ளது.
கிரிசில்(Crisil) கடன்தர மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பணவீக்கம் அதிகரிக்காது என்றும், 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.8 சதவீதமாக வளரும் எனவும் தெரிவித்துள்ளது.
Paytm Payment வங்கி வரும் ஜுன் மாதத்தில், சிறிய நிதி வங்கியை தொடங்குவதற்கான அனுமதி கேட்டு இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னாவில் NMDC தனது வைரச் சுரங்கத்தைக் கொண்டுள்ளது. இது நாட்டின் மொத்த வைர வளத்தில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள ஒரே மாநிலமாகும். மஜ்கவான் பன்னாவில் உள்ள என்எம்டிசியின் வைரச் சுரங்கத் திட்டம் நாட்டிலேயே இயந்திரமயமாக்கப்பட்ட வைரச் சுரங்கமாகும்.
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் (OPEC) உறுப்பினரான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக கூறியதை அடுத்து, புதன்கிழமை விலை குறைந்தது.