இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Irdai) தலைவர் தேபாசிஷ் பாண்டா கூறுகையில், வணிகம் மற்றும் செயல்பாடுகளின் அளவைப் பொறுத்து ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கான நுழைவுக் கட்டணம் என்ன என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒழுங்குமுறை ஆணையத்திடம் விடப்பட வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிஃபோன் லிமிடெட் நிறுவனம் ரூ. 26 ஆயிரத்து 500 கோடி கடனில் சிக்கி தவிப்பதாக வும், இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) இரண்டையும் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த வங்கியின் செயல் இயக்குநர் நிதேஷ் ரஞ்சன், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது இருக்கம் தொழில்நுட்ப கட்டமைப்பிலிருந்து விலக உள்ளதாகவும், புதிய தொழில்நுட்ப சேவைகளுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி, நிறுவனத்தின் 0.93% பங்குகளை வைத்திருக்கிறார். வரி நிலை என்பது இந்திய வணிகத்தின் ஈவுத்தொகையில் அவர் பிரிட்டனில் வரி செலுத்த மாட்டார் என்பதாகும்.