சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையில் கடந்த 3 நாட்களில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக பங்குதாரர்களின் பணமிழப்பு ரூ. 6,80,441 கோடியாக இருந்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக அதன் இழப்புகளை தொடர்ந்து, வியாழன் அன்று மீண்டும் பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 60,000-நிலைக்கு கீழே முடிந்தது.
ஏப்ரல் 1, 2021 முதல் 2022 ஜனவரி 17 வரை 1.74 கோடி வரி செலுத்துவோருக்கு ₹1.59 டிரில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை வியாழக்கிழமை ஒரு டுவிட்டில் தெரிவித்துள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹2,243 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு காலாணடில் பதிவான ரூ.1.921 கோடியிலிருந்து 17% அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளரான HUL, கொரோனா தொற்று, பொதுமுடக்கம் போன்ற காரணிகளில் இருந்து வெளி வந்ததால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
PTC India Financial Services Ltd (PFS) இன் பங்குகள், மே 2015க்குப் பிறகு, வியாழன் அன்று நடந்த ஒப்பந்தங்களில், பிஎஸ்இயில் 19% வரை சரிந்தன. கார்ப்பரேட் ஆளுகை சிக்கல்கள் மற்றும் பிற விஷயங்களில் மூன்று இயக்குநர்கள் ராஜினாமா செய்த பிறகு இந்த எதிர்வினை வந்துள்ளது.
மைக்ரோசாப்ட் கேமிங் டெவலப்பர், ஆக்டிவிஷன் ப்ளிஸார்டை 69 பில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்தியதை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் புதன்கிழமை விமர்சித்தார். ஏழை நாடுகள் கடன்களை மறுசீரமைக்கவும், COVID-19 மற்றும் வறுமையை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில் இது தேவையா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.