நெஸ்லே இந்தியா நிறுவனம் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், 2022-ஆம் ஆண்டிற்கான, வழங்கப்பட்ட, சந்தா செலுத்திய முழுப் பங்குக்கும் தலா ரூ. 10/- என்ற ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.25 (ரூபாய் இருபத்தைந்து மட்டும்) இடைக்கால ஈவுத்தொகையாக அறிவித்தது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இது.
ஸ்ரீராம் குழுமத்தின் நிதிச் சேவை வணிகத்திற்கான ஹோல்டிங் நிறுவனமான ஸ்ரீராம் கேப்பிட்டல் மற்றும் பான்-ஆப்பிரிக்க நிதிச் சேவைக் குழுவான சன்லாம் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 5,000 பேரை வேலைக்கு அமர்த்த இருப்பதாக அறிக்கை ஒன்றில் கூறியது.
எங்கள் பங்குதாரர்கள் நிர்வாகக் குழுவில் இருந்தாலும், இல்லா விட்டாலும் அவர்களு்டைய உள்ளீட்டை நாங்கள் எப்போதும் மதிப்போம் . எலான் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர் மற்றம் அவரது உள்ளீட்டிற்கு எப்போதும் செவி சாய்ப்போம் என பாரக் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்பது திட்டங்களில் மங்களூர் துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கொள்கலன் முனையங்களின் விரிவாக்கம் மற்றும் புதிய கொள்கலன் முனையத்தை இயந்திரமயமாக்குதல் உள்ளிட்ட பைப்லைனில் உள்ள மற்ற திட்டப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.